விடியும் வேளை
விடியும்வரை
வியாபித்திருந்தது
பனிநீரின் அரசாங்கம்..
பச்சைப் புல்நுனிமுதல்
பரந்துயர்ந்த மரங்கள்
பட்ட மரங்கள்,
விட்டுவிடவில்லை எதையும்
எட்டும் தூரம்வரை..
ஆட்சி மாறுகிறது
அதிகாலையில்,
பகலவன் வருகிறான்
பதவி ஏற்க..
பதறி ஓடும்
பழைய ஆட்சியாளர்கள்-
பனித்துளிகள்...!