கருப்பு வெள்ளை கவிதை அவள்

கவிதை புயல் கம்பனும் கண் மூடாமல் பார்க்கிறான்
கயல் விழி கொண்ட என்னவளை
பொதுமறை எழுதிய புலவனும் புத்தி பேதலித்து நிற்கிறான்
பதுமையின் புன்னகையை காண
புத்தனும் பித்தனாய் அலைகிறான்
மங்கை அவள் மஞ்சள் முகம் காண்கயில்
தேவர்களின் அமுதாய் , தென்றலின் கீற்றாய்
திகட்டாத இனிப்பாய் , தேன் சொட்டும் அழகாய்
திருவிழாவின் தேரோட்டமாய் , மழலை கொஞ்சும் பொம்மையாய்
எட்டி பிடிக்க இயலாத நிலவாய் , கொஞ்சி பேசும் தமிழாய்
கருப்பு வெள்ளை விழியால் , என்னை கட்டி அணைக்கும் கவிதை அவள் ...