என் கண்ணனுக்கு ஓர் கடிதம்

என் கண்ணனுக்கு ஓர் கடிதம்

கண்ணா...
கண்ணா...
கண்ணாவென
அனுசனம்
அழைத்தேன்
உன்னை...

ஏன்
தந்தாய்
ஏமாற்றம் ...

உன் உருகண்ட
என்னிரு விழிகள் உதிர்க்கின்றது
கண்ணீர்...

உன் கீர்த்தனை
பாடிய
எம்மிதழ்கள்
சாதிக்கிறது
மெளனம்...

உன்னை
நினைத்து
உருகி நின்ற
என் நெஞ்சம்
உடைந்தது
நூறாக...

ஏன்
தந்தாய்
ஏமாற்றம் ...

விளைந்த
விளைவால்
மறந்தது
என் முகம்
புன்னகைக்க ...

என் கணீர் குரல்
ஒலிக்க
மறுக்கிறதே...

பூரிப்பால்
சிவக்க வேண்டிய என்னுள்ளம்
உதிரம் வழிந்து
சிவந்ததே ...

கண்ணா
கண்ணா
கண்ணா ...
உன்னை விட்டால் யாருமில்லை
சொல்லி அழ...

இப்படிக்கு
என்றென்றும்
உன்னவள்...

எழுதியவர் : G. செல்வமணி (28-Apr-19, 10:18 am)
சேர்த்தது : Selvamani
பார்வை : 259

மேலே