தலைவன்

நல்லோரைத் தாழ்த்திவிட்டு
அல்லாரை மேலுயர்த்தி
வேடிக்கைப் பார்த்திருக்கும்
ஒருவன் - காட்டும்
வித்தைகளால் வினையகற்றும்
தலைவன் !!

நிலவுக்குள் ஒளியாக
மலருக்குள் மணமாக
மறைவாகத் தானிருக்கும்
ஒருவன் - நான்கு
மறைபோற்றும் ஒப்பற்ற
தலைவன் !

கற்சிலையாய் நின்றாலும்
அற்புதங்கள் பலநிகழ்த்தி
நம்பியவர் நெஞ்சுறையும்
இறைவன் - அவனே
நடத்துகின்ற நாடகத்தின்
தலைவன் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-May-19, 9:42 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 50

மேலே