வாழ்க்கை
பார்க்கும்போதே
படபடத்து சரிந்து
உயிர் இழந்த ஒருவனுக்கு
சொல்ல முடியாது
போனது ஒன்றுதான்.
ஆசை ஆசையாய்
யாருக்கென்று உழைத்தாலும்
எந்தப்பெயர் கிடைத்தாலும்
கல்லில் பொதிக்க முடியாது
காகிதத்தில் வடிக்க முடியாதும்
வழித்தெறிந்த ஒன்றாய் மட்டுமே இருக்கிறது எப்போதும்
எந்த பிழைப்பும்...