காதல்

இவ்வுலகில் வையகத்தில்
இறைவன் தந்த நல்லின்பமெல்லாம் நீ தான்
நல்லெண்ங்கள் எல்லாமாய் நீ
வீணையின் இன்ப நாதமடி நீ
வீசும் தென்றல் நீ
நீல வான வெண்ணிலவு நீ
மின்னும் தாரகைகளில் உன் சிரிப்பு
சோலைக்குயிலின் இன்னிசையடி நீ
ஆடலுக்கே இயற்கையில் இலக்கணம் தந்த
தோகை மயிலும் நீதான்
ஆர்க்கும் அலைகளின் ஓம்கார ஓசையும் நீயே
இப்படி உன்னைப்பற்றி எழுத எழுத
கவிதைதான் வளர்ந்துகொண்டே போகிறது
அப்போது புரிந்தது எனக்கு
எழுத்தில் அடங்கா பேரெழில் நீ என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-May-19, 4:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 313

மேலே