நண்பா நீ
நண்பா நீ....
கோபுரத்தில் வைக்கும் அழகிய கும்பம்.
மலை உச்சியிலிருந்து புறப்படும் மெல்லிய தென்றல்.
விடியற்காலை மலர் இதழ்களின் உறங்கும் பனி.
அதிகாலை ஆதவன்.
பசு கொடுக்கும் அமுதம்.
நல்ல நூல் கொடுக்கும் ஞானம் பெற்றவன்.
அழகிய கவிதை.
தெளிந்த நீரோடை.
வற்றாத ஜீவ நதி.
பெருங்கடல்.
பூமியின் குணம் கொண்டவன்.
வானம் போல் எண்ணம் உள்ளவன்.
அள்ள அள்ள கொடுக்கும் அமுதசுரபி.
வாழ்க பல்லாண்டு
வாழ வேண்டும் பல நூறாண்டு.
- பாலு.