இரவு

பகலெல்லாம் உடல்நோக உழைத்து அலுத்த
உடல், ஓய்வு தேடி தன்னை மறந்து தூங்கும்
இருள் கவ்விய நேரம் இரவு உழைப்பாளிக்கு,
ஆனால் பகலென்ன, இரவென்ன இவர்க்கு
நாலுசுவர் சூழ்ந்த கட்டிடத்திற்குள் குளிர்
சாதனமும், மின் விளக்கும் கை விறல் கீழிருக்க…
உழைப்பாளிக்கு ஓய்வுதரும் அதே இரவுதான்
நீதிக்கு நேரெதிராய் சதி செய்வோருக்கும்
அடைக்கலம் தரும் இருள் நேரம்….
காமதேவன் மகிழ்ந்து இன்ப உலா வரும் காதலர்
மயங்கும் நேரமும் இந்த இரவு நேரமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Jun-19, 4:27 pm)
Tanglish : iravu
பார்வை : 47

மேலே