காரணமில்லாமல்,,,,,,,,,

ஏன் வந்தது
அந்த நாள்
என் வாழ்வில்,,,
என்னை முடக்கி
போடவா???
இல்லை,,,
என்னை சோதித்து
பார்கவா???

தெரியவும் இல்லை,
புரியவும் இல்லை,

ஏழு மாதங்கள்
நான் நானாக
இல்லையா
எல்லாவற்றிற்கும்
யாரோ ஒருவரை
சார்ந்து இருக்க வேண்டிய
சூழ்நிலை,,,

தவறு என்மீதோ
இல்லை அடுத்தவர் மீதோ
காயம் எங்குதான்,,
காரணம், நான் பாதசாரி...
வாகனத்தில் வந்தவன்
சென்று விட்டார் ,,,
என்னை காயப்படுத்திவிட்டு,,
தன்னை அவமானப்படுத்தி கொண்டு,,

இப்போதுதான் புரிகிறது,
காரணம் இருந்து காயப்பட்டு,
செயலிழந்த எனக்கே
வலிக்கிறது,,,
எப்படி இருக்கும்
விதியின் விளையாட்டோலோ
இல்லை எதோ ஒன்றினால்
தனக்கும் அதற்கும்
எந்த சம்மந்தமும்
இல்லாத போதிலும்
கஷ்டத்தை அனுபவிக்கும்
மாற்று திறனாளிகளுக்கு ,,,,,,,,,
காரணமில்லாமல்,,,,,,,,,,

எழுதியவர் : ஸ்ரீஜே (13-Jun-19, 5:43 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
பார்வை : 151

மேலே