அவள்

திங்களன்று பார்த்தேன் திங்கள் முகத்தாளை
செவ்வாயில் அவள் செவ்விதழைகள் விரிந்து
புன்னகை தந்தாள் …..
புதனில் அவளோடு பேசிப்பார்க்க அவள்
புத்தியின் கூர்மை விளங்கியது …
வியாழக்கிழமை அவள் முகத்தில்
அறிவொளி வீசுவது கண்டேன்
வெள்ளி வந்தது அவள் வந்தாள் தேவதையாய்
தலைக்குளித்து முகத்தில் மஞ்சள் பூசி
கோதிய கார்க்கூந்தலில் பூவைத்து
பிறைநுதலில் குங்குமப்பொட்டு இட்டு
மங்கள ரூபியாய் தூயவளாய்
சனியில் அவளை ஆத்தங்கரையில் கண்டேன்
நெய் விளக்கேற்றி யானை முகனை
வலம் வந்து வணங்கி நின்றாள்……
ஞாயிறு இன்று அவளைக்கண்டேன்
அவள் என்னைப்பார்த்து முல்லை
சிரிப்புதிர்த்து தலை குனிந்தாள்
காலால் கோலமிட்டாள் அதில்
என் முகத்தை வரைந்திருந்தாள் கோலமாய்
பார்த்து உவகையின் எல்லையைதொட்டது
என்னுள்ளம் அந்த மௌன காதலை ஏற்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Jun-19, 9:13 pm)
Tanglish : aval
பார்வை : 364

மேலே