நறுந்தொகை 14
14. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்
- அதிவீரராம பாண்டியர்
பொழிப்புரை:
அறிவுடையோர்க்கு அழகாவது நூல்களைக் கற்றுணர்ந்து செருக்கின்றி அடங்கியிருத்தல் ஆகும்.
அடங்கல் - செருக்கின்றி யிருத்தல்; மனம் அடங்குதல் - நூல்களிற் கூறியபடி நடத்தல்.