பொய்யென்ற தீவில்

பொய்யென்ற தீவில்
நான் பிறந்தேன்
மெய்யென்ற ஒன்றை
நான் இழந்தேன்-என்
பூக்கள் வாடிப் போக-உன்
நினைவில் நெஞ்சம் சாக...
சரியான தோல்வி காதல்
பிரயாணத் தேடல் காதல்...
உயிரே...
பன்னிரண்டு வயத்தினிலே
எந்நெஞ்சம் போனது..
சொந்தங்களும் இன்பங்களும்
நீயின்றி பொய்யானது...
காற்றில் ஆடும் பூக்களும்
காற்றில்லாமல் சாகுதே...
எந்தன் வாழ்விலே...
சோகம் கண்ணில் ஆடுதே
தேகம் கீழே வீழுதே
ஏனோ கண்மனி...
விண்வெளியும் புல்வெளியும்
என்முகத்தைப் பார்க்குது
வாடிநிற்கும் என்மனதில்
மருத்துவங்கள் கூறுது...
நிலவைப் போன்ற உன்னைநான்
கண்டு கிணற்றில் மூழ்கினேன்
மூச்சும் நின்றதே...
சேவலாக திரிந்தவன்
சாம்பலாக மாறினேன்
ஏனோ கண்மனி...

எழுதியவர் : H.S.Hameed (20-Jun-19, 11:06 am)
சேர்த்தது : HSHameed
பார்வை : 247

சிறந்த கவிதைகள்

மேலே