இப்படிக்கு மாணவன்
விழியில் வழியும்
விழிநீரே இன்று
பூமியில் பூத்த
கடவுள் என
என் கண்கள்
சொன்ன இறைவனவன்
என் ஆசிரியன்
என் மனதை
உடைத்து விட்டானே
மாணவன் நான்
தவறு செய்தால்
தண்டிக்க அவருக்கு
உரிமை உண்டு
ஆனால் அவர்
செய்த தவற்றை
சொல்ல இங்கே
எனக்கேனோ
உரிமை இல்லை