வஞ்சமனம் குத்திரர்பால் மூன்று குணம் - நீதி வெண்பா 23

நேரிசை வெண்பா

செங்கமலப் போதலர்ந்த செவ்விபோ லும்வதனம்
தங்கு மொழிசந் தனம்போலும் - பங்கியெறி
கத்தரியைப் போலுமிளங் காரிகையே வஞ்சமனம்
குத்திரர்பால் மூன்று குணம். 23 நீதி வெண்பா

பொருளுரை:

இளமையாகிய பெண்ணே!

வஞ்சகர்களுக்கு முகம்,

அலர்ந்த செந்தாமரையின் செழுமை போல அழகாகவும்,

இனிமை தங்கிய சொற்கள் சந்தனம் போலக் குளிர்ந்தும்,

கபடத்தையுடைய வஞ்ச மனம், முடியை அறுத்தெறிகின்ற கத்திரியைப் போலக் கொடிதாகவும். இருக்கும் மூன்று குணங்களாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-19, 11:12 am)
பார்வை : 100

மேலே