வஞ்சமனம் குத்திரர்பால் மூன்று குணம் - நீதி வெண்பா 23
நேரிசை வெண்பா
செங்கமலப் போதலர்ந்த செவ்விபோ லும்வதனம்
தங்கு மொழிசந் தனம்போலும் - பங்கியெறி
கத்தரியைப் போலுமிளங் காரிகையே வஞ்சமனம்
குத்திரர்பால் மூன்று குணம். 23 நீதி வெண்பா
பொருளுரை:
இளமையாகிய பெண்ணே!
வஞ்சகர்களுக்கு முகம்,
அலர்ந்த செந்தாமரையின் செழுமை போல அழகாகவும்,
இனிமை தங்கிய சொற்கள் சந்தனம் போலக் குளிர்ந்தும்,
கபடத்தையுடைய வஞ்ச மனம், முடியை அறுத்தெறிகின்ற கத்திரியைப் போலக் கொடிதாகவும். இருக்கும் மூன்று குணங்களாகும்.