ஒற்றிலா அறுசீர் வண்ண விருத்தம்

தனன தான தனன தான
தனன தனதனா

அலைக ளோடு கமல மாட
அழகு மிளிருதே!
நிலவு வானி லுலவு வேளை
நினைவு குளிருதே !
மலையை மோதி முகிலு மோட
மனமு மகிழுதே !
தலைவ னோடு தலைவி யோடு
தனிமை விலகுதே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jul-19, 12:09 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 24

மேலே