தெரியாது

பூண்டுக்கு பூண்டுனு யாரு பேரு வச்சா?
என்ன இதுக்குப் பேரு பெருங்காயமா!
கத்தினு இதுக்கு ஏன் பேரு வச்சாங்க?
கப்பல் ஏன் மண்ணு மேல ஓடாது!
நீங்க எதுக்கு நீங்களாப் பொறந்தீங்க?
நான் எதுக்கு நானாப் பொறந்தேன்?
நம்ம உலகத்த ஆண்ட ராஜா ராணியெல்லாம்
இப்ப எங்கப் போயிருக்காங்க?
என்னப்பா இத்தன கேள்வி கேட்டுட்டேன்
எதுக்காவது பதில் சொல்லுங்களே!
எனக்கேட்ட குட்டிப்பாப்பாவிற்கு
நான் சொன்ன
எனக்குத் தெரிந்த ஒரே பதில்
"தெரியாது"

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Jul-19, 12:56 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : theriyaadhu
பார்வை : 115

மேலே