காதலியில்லையேல் காதலனில்லை

இமைகள் இல்லா கண்கள் இங்கே
உறக்கம் கொள்வதில்லை கண்மணியே
காற்று இல்லா வாழ்வினிலே உயிர்
சுவாசம் பெறுவதில்லை கண்மணியே

மழை சாரலா வெற்று காணலா

மேகத்தில் துளிர்விடும்
மழைத்துளி எல்லாம்
மண்ணில் விழக்கூடும் கண்மணி
காணும் காணல்
நீர்த்துளி எல்லாம்
தாகத்தை தணித்திடுமா கண்மணி

காற்றிலா உயிர் சுவாசத்திலா

காற்று இல்லா தேசத்தினிலே
உயிர் வாழ சொல்ல முடியுமா
நீயூம் இல்லா வாழ்வினிலே
உயிர் காற்றை சுவாசிக்க முடியுமா

இரவும் மாறும் பகலும் மாறும்
வானம் மாறுவதில்லையே
வண்ணம் மாறும் எண்ணம் மாறும்
உள்ளம் மாறுவதில்லையே

பார்த்த நொடியில் மனதை பறித்த
நெஞ்சில் பூத்த பூவடி நீ
மனதை பறித்து இதயம் கொடுத்த
காதல் தேவதை நீயடி நீ

இமைகள் இல்லா கண்கள் இங்கே
உறக்கம் கொள்வதில்லை கண்மணியே
காற்று இல்லா வாழ்வினிலே உயிர்
சுவாசம் பெறுவதில்லை கண்மணியே

இமைகளிலா உயிர் சுவாச காற்றிலா
எதிலும் உள்ளது நீயடி நீ

எழுதியவர் : பசுபதி (16-Jul-19, 4:59 pm)
பார்வை : 221

மேலே