நாணல்

கடற்கரை வாயிலில்
நான் உன்
கரம் பிடித்து நகர்கையிலே;
நரகமான நாட்கள் எல்லாம்
நன்மதிப்புற நானும் கண்டேன்

அமைதி காத்தேன்!
ஆற்றுப்படுகையில் நாணலாய்
இருந்த என் காதல்
அறுபட்டு போகையில
ஆறு நாள் வேலையில
அணு அணுவா சித்திரவதை
அந்த ஆகாச சூரியனின்
அக்னியில்;

தவம் முடிந்து தவழ்ந்த
மழலை போல்
மண்ணில் மறுதோற்றம்
என் நாணலுக்கு
மணமுடிந்த நம்மை அதன்
மடியில் ஏற்கையிலே

எழுதியவர் : சாரல் துளிகளின் சன்னல் கா (17-Jul-19, 10:37 pm)
சேர்த்தது : கோகுல்
Tanglish : naanal
பார்வை : 208

மேலே