காலம் என்ற வாகனம்

கட்டுப்படாமல் திமிரினாலும்
கச்சித வாழ்க்கை வாழ்ந்தாலும்
காலம் என்ற வாகனம் - உன்னை
கனந்தோறும் சுமந்துக் கொள்ளும்

கவலைகள் பல சூழ்ந்து - மனம்
காலவாய் போல் கொதிப்பினும்
காணும் நிகழ்வினால் மகிழ்ச்சி பொங்கி
கட்டுபாடின்றி தினம் குதுகளிப்பினும்

காட்டாற்று வெள்ளம் போல் - தன்
கரங்களினால் கட்டி இழுத்து
கலவையாய் கலந்து கரைத்து
கவின்மிகு நிலையை புகுத்திவிடும்

காலத்தின் திரிபு காலன் - வாழ்க்கை
களத்தில் தீமை நன்மை உன்னை காட்சிப்படுத்தும்
காலமும் காலனும் கணக்கிடுவதில்லை அதை
கவர்ச்சிக்காக வாழ்தல் என்பது பெரும் பிழையே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Jul-19, 10:19 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 58

மேலே