குறுந்தொகை குறிஞ்சித்திணை 54 வது பாடல்

பாடல் காட்சி “ வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

திருமண நாள் தள்ளிப்போகிறது. தலைவிக்குக் கவலை.
கவலைப்பட்ட தலைவி தன நிலையை தோழிகிட்ட சொல்லுறது தான் இந்தப் பாட்டு


இப்படலை எழுதியவர் : மீனெறி தூண்டிலார் . இந்த ஒரு பாட்டு தான் இவர் எழுதியதாக இருக்கிறது மீனெறி தூண்டில்’ என என இப் பாடலில் வரும் தொடரைக்கொண்டு இப்புலவர் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது

பாவகை : நேரிசை ஆசிரியப்பா .

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று ஈற்று அயலடி (இறுதி அடிக்கு முந்தைய அடி) 3 சீர்களாகவும் (சிந்தடி), ஏனைய அடிகள் 4 சீர்களாகவும் (அளவடி) வருவது

விளக்கம்

யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே



பாட்டோட முதல் வரி , கடைசி வரி பாக்கலாம்
யானே ஈண்டையேனே - நான் இங்கு இருக்கிறேன்
என் நலனே - என்னுடைய நலன் , உள்ளம்
கானக நாடனொடு - காட்டையுடைய தலைவனோடு,
ஆண்டு - நாங்கள் பழகிய இடத்தில்
ஒழிந்தன்றே – நீங்கியது

நான் இங்க இருக்கேன் , ஆனா என்னோட மனது , காட்டில் இருக்கிற தலைவன் கிட்ட நாங்க பழகிய இடத்திலேயே போயிருச்சு னு சொன்ன தலைவி

அந்த மனசு எவ்வளவு வேகமா தன்னை விட்டு நீங்கியதுனு உதாரணம் சொல்றாங்க 2 , 3 , 4 வது வரிகள்ல

ஏனல் காவலர் கவண் ஒலி -
ஏனல் காவலர் – தானியத்தை காக்கும் காவலர்கள்
கவண் ஒலி - கவண் - உண்டி னு வட்டார வழக்குல சொல்வாங்க , கற்களை வைத்து தாக்கும் ஒரு ஆயுதம் ம் இந்த ""angry bird விளையாட்டுல பறவையை வெச்சு விடுவோமே அதுதான் கவண் . அந்த கவண் விடுவதால் காற்றில் கல் போகும் ஒலியைக் கேட்டு

வெரீஇக் - பயந்து

கான யானை கை விடு பசுங் கழை
கான யானை - காட்டு யானை

கை விடு பசு கழை - கைவிட்ட பசிய மூங்கிலானது எவ்வளவு வேகமா மேல போகுமோ

மீன் எறி தூண்டிலின் நிவக்கும் - தூண்டில்ல மீன் மாட்டிருச்சுனா அந்த தூண்டில் எவ்வளவு வேகமா மேல போகுமோ

அந்த வேகத்தில என் மனசு போய் விட்டது , இப்ப திருமண நாள் வேற தள்ளி போகுதுனு கவலையோட புலம்புற பாட்டு தான் இது

எழுதியவர் : பாவி (2-Aug-19, 8:42 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 1361

மேலே