வா அன்பே வா

விழிகளால் வாவென அழைக்கிறாய்
விரும்பி வந்தால் போவென முறைக்கிறாய்
நழுவிச் செல்லும் மீனாக நீ
இன்னும் இன்னும் வழுகிச் செல்வது ஏனடி
தாயின் அணைப்பைத் தேடும்
தனையனாக நீ வந்து என்னை
ஆரத் தழுவத் துடிக்குதடி
என் ஆழ் மனது


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (3-Oct-19, 10:53 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 285

மேலே