புன்னகை
அன்று...
பொதிந்து நின்ற உந்தன்
புன்னகைதவழ்
பொலிவு முகம்
என்றும் என் மனதின் ஓரம்
காலம் பல சென்றாலும்
கோலங்கள் பல மாறியும்
காயாததன் ஈரம்
இன்றும்.
அன்று...
பதிந்து நடந்த உன்னுடன்
பாதைகள் சிறுதூரம்
சொல்ல விளங்கா உணர்வுடன்
சிலிர்த்து சுவைத்த நேரம்
காலம் பல சென்றாலும்
கோலங்கள் பல மாறியும்
மாறாத நம் நட்பின் சாரம்
இன்றும்.