இரட்டையர்களுக்கு அம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து
…................................
சேர்த்து வைத்த ஆசையில்
சேர்ந்தே பூத்த இரு மலர்களுக்கு பிறந்தநாள்…

கட்டிவைத்த கற்பனையில்
முட்டிப்பிறந்த இரு கவிதைகளுக்கு பிறந்தநாள்…

கோர்த்து வைத்த வார்த்தைகளை
சேர்த்து வடித்த இரண்டு காவியங்களுக்கு
பிறந்தநாள் .

மசமசன்னு வளர்ந்து
மல்லுக்கு நின்னாலும்
எனக்கு
மடி தூங்கும் பிள்ளையடா நீங்கள்….

கட்டைக் குரலோடு
கட்டுமஸ்தா நின்னாலும்
எனக்கு
முகம் பேசும் மழலையடா நீங்கள்…..

கண்ணாடி பார்த்து
தலைகோதி விட்டாலும்
எனக்கு
தவக்கும் தங்கமடா நீங்கள்….

முறுக்கு மீசை வந்து
முறுக்கி விட்டு சென்றாலும்
எனக்கு
முத்துச்செல்வமடா நீங்கள்…..

சிட்டென பறந்து
சிக்ஸ்பேக் வைத்தாலும்
எனக்கு
சின்ன குழந்தையடா நீங்கள்….

தொட்டவுடன் நெளிந்தாலும்
தோளுக்கு மேல் வளர்ந்தாலும்
எனக்கு
தொட்டில் குழந்தையடா நீங்கள்….

கைப்பேசி தகவல் எல்லாம்
மெய் பேசி சிரித்தாலும்
எனக்கு
கை சூப்பும் கண்ணனடா நீங்கள்…

புல்லட் வண்டியில
புழுதி பறக்க சென்றாலும்
எனக்கு
புத்தம் புது மலர்களடா நீங்கள்..

சீறிவரும் காளைகளாய்
வீரத்தோடு நின்னாலும்
எனக்கு
கன்னுக்குட்டியடா நீங்கள்….

தல தளபதினு
இரண்டா நீங்க இருந்தாலும்
எனக்கு
தல பிள்ளையடா நீங்கள்….

பதினைந்து வயசு ஆனாலும்
பத்தாம் வகுப்பு படிச்சாலும்
எனக்கு
பத்தரமாத்து தங்கமடா நீங்கள்….

கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு
கூட்டத்தில சென்றாலும்
நான்
அள்ளிக் கொஞ்சும் அழகனடா நீங்கள்….

அம்மாவின் உலகமடா நீங்கள்…..


இரு விருட்சங்களுக்கு
விதையின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
பிரியமுடன் ப்ரியா...

எழுதியவர் : பானுப்பிரியா (10-Dec-19, 9:24 pm)
சேர்த்தது : செ பானுப்ரியா
பார்வை : 285

மேலே