மழலையின் பாசம்

ஈன்ற மழலையிடம் கடவுள் கேட்டாா் :
நீ பிறந்தவுடன் யாருக்கு முதலில் நன்றி கூறுவாய் :
தாய்க்கா ?
தந்தைக்கா ?
மருத்துவருக்கா ? என்று...

மழலைக் கூறியது :-
மருத்துவருக்கு என்று...

ஏன் உன்னை காப்பாற்றியதற்காகவா என்று கடவுள் கேட்டாா்...

இல்லை...
என் தாயை காப்பாற்றியதற்காக...
என் தாய்க்கு மறுஜென்மம் கொடுத்ததற்காக என்று மழலைக் கூறியது......(பிரசவமென்பது - மறுஜென்மமாகும் )

-- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : - கவிஞர் நளினி விநாயகமூர்த (11-Jan-20, 12:37 pm)
பார்வை : 280

மேலே