பேழைகளோ இல்லை பிழைகளோ
இடம் பொருத்து மாறும் நெறிகள்,
மனம் பொருத்து மாறும் வழிகள்-இதில்
வாயுள்ள பிள்ளைக்கே பிளைப்பு !
கடவுள் என்றொரு கோட்பாடு-
கண்டவனும் விட்டெறியும் நாட்டுக் குண்டு!
அண்டத்தோடு ஒப்பிடின் அணுவிலும் சிறுமை,
எண்ணம் என்னவோ அனைத்தும் என்னால், என்று!
பழைமை பற்றி பெருமை பேசுவோர்,
எதிர்காலக் கனவில் கரைவோர்,
நிகழ்கால அன்றாடத்தில் மூழ்குவோர்..-அனைவரும்
தத்தம் சித்தாந்தமே சரி என்று மார்தட்ட –
இயற்கையை கூறு போட்டு தனதாக்கி,
விதிமுறைகள் பல வகுத்து-பாவம்
விலங்குகளையும் வறியோனாய் கையேந்த செய்து...
இவை அனைத்தும் எழுத்து வடிவில்!
எல்லாம் ....
கருத்துப் பேழைகளோ ? இல்லை பிழைகளோ?
எடுத்துச் சொல்வார் எவரோ ?