முதல் இரவு

இந்த இரவில் - நான்
என்ன செயல் செய்துவிட்டேன்...
விடிந்ததும் உதயமாகப் போவது
கதிரவன் மட்டும் அல்ல..-நான்
செய்த இந்த காரியமும் தான்..

காலையில் என்னை காண்போர்
ஏளனம் செய்வார்களா?
இவன் செய்த இச்செயல்
பாவமானது என்பார்களா?
நண்பர்கள் எனை கண்டு
கோபம் கொள்வார்களா?

என்ன செய்வேன்..- இதனை
மறைக்க முடியாது..
மூடி மறைக்கவும் முடியாது..
அவள் ஆசைப்பட்டால்?
உன் அறிவினை எங்கே
நீ...தொலைத்தாய்..

இந்த இரவினில்..முதன் முறை
எனது அரும்பு மீசையை..
சவரம் செய்தது தவறுதான்..

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (7-Feb-20, 8:35 pm)
Tanglish : muthal iravu
பார்வை : 202

மேலே