அருமையான காதல் கவிதை

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️

*கவிதை*

❤️🧡💛💚💙💜💜🖤🤍🤎
பெண்ணே!
நீ என்னை
கைகழுவியது போல்
என் கண்ணில் உள்ள
உன் முகத்தை
என் கண்ணீரில்
கழுவிப் பார்க்கிறேன்
போவதாகத் தெரியவில்லை...

உன்னிலிருந்து
என்னை பிரித்தபோது
என்னில்
எதுவும் மிச்சமில்லை...

கண்ணாடி ஜாடி
கைதவறி
கீழே விழுந்து
உடைந்த பிறகு
அதிலுள்ள தண்ணீரின்
நிலை என்ன?

உன்னைவிட
எமனே! பரவாயில்லை
அவனை நம்பினேன்
என்னை கைவிடவில்லை...

என்னை
உன் உதட்டிலேயே
வைத்திருந்ததால்
உமிழ்ந்த விட்டாய்...
ஆனால் நானோ
உன்னை
என் இதயத்தில் அல்லவா
வைத்திருக்கிறேன்
என்ன செய்வேன்...?


*கவிதை ரசிகன் குமரேசன்*

❤️🧡💛💚💙💜💜🖤🤍🤎

எழுதியவர் : கவிதை ரசிகன் (20-Feb-20, 9:02 am)
பார்வை : 83

மேலே