செல்லச்சிட்டு😊

சிட்டுச்செல்ல சிட்டு
சிணுங்கும் நல்ல மொட்டு
செல்ல நடைப் போட்டு
சிரிக்கும் மலர்க்கட்டு

அப்பாவுக்கு ஆறு
அம்மாவுக்கு நூறு
அமுதமுத்தம் கொடுத்து
ஆளையே மயக்கும்

கண்ணாலே சிரிக்கும்
கவலைகளைத் துரத்தும் கற்கண்டாய் இனிக்கும்
காக்க வைத்தால் உதைக்கும்

சிரித்து நம்மை மயக்கும்!
சிணுங்க மனம் துடிக்கும்!
அன்பாலே அணைக்கும்!
ஆசையாக அடிக்கும்!

மழலைச்செல்வம் பாரடா!
மனமகிழ்ச்சி நாடடா!
குழலை ஊதிக் கேளடா!
குழவிக்குரல் இனிதடா!

மக்கட்செல்வம் தானடா!
மற்றச்செல்வம் ஏனடா?
மகிழ்ந்து பாட்டு பாடடா!
மயங்கி நடனம் ஆடடா!

கவலைநூறு இருப்பினும்
மழலைமொழி கேட்கையில்
மயக்கம் கொண்டு நாமுமே
மறந்திடுவோம் நாளையே...

எழுதியவர் : திருமகள் மு (20-Feb-20, 5:47 pm)
பார்வை : 82

மேலே