நிறப்பிரிகை
.
நீ வரையத் துவங்கினாய்
உன்னைப் பிரிய
மனமின்றியே
குழம்பிக் கிடக்கிறது
கோலமும்
குவிந்த உன் விரலிடை
பட்டகமாக
ஒரு
நிறப்பிரிகையே நடக்கிறது
நீண்ட நேரமாய்
உனக்கும்
கோலத்துக்குமிடையே
நடக்கும்
வண்ணங்களின்
பரிமாற்றத்தை
வளைந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
வானவிில்
உன்னைப்பற்றி
எழுதத் துவங்கிய
கவிதை ஒன்றின்
எழுத்துக்களெல்லாம்
தலைகீழாய்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
வவ்வால்களைப் போல்
குனிந்து
கோலம் போடும
உன் முகம் தரிசித்து
வார்த்தைகளாய்
சாப விமோசனம் பெற
நீ தேவதை என்று
நான்
எழுதத் துவங்கிய
கவிதை ஒன்றிற்காய்
படபடத்த
உன் இமை கண்டு
சிறகு முளைக்கிறது
கவிதைக்கும்
சேர்ந்து பறக்க ...🦋