என் ராமன்
களவு காலத்தில் அன்பாகப் பேசி
கன்னியின் மனதில் கற்பனை வளர்த்து
கப்பல் ஏற கடற்கரை சென்றால்
கப்பல் இல்லையென்றானே!
என் ராமன்....
கற்பனை வளர்த்த கன்னியின் மனதில்
காயம் இன்னும் தீரவில்லை!
கருவிழியிலிருந்து வரும் கண்ணீர்துளி இன்னும்கூட நிற்கவில்லை!
தோழிகூட துணையில்லை!
ஆறுதல் சொல்ல ராமன் இல்லை!
தனிக்காட்டில் வேதனை நிலை!