வன்முறைக்கு பின்

கால் வைக்க கூட இடமில்லா பகுதியில்
இன்று…எவரும் இல்லாத் தனிமை.
சரி என்று கடந்து முன்னே
செல்ல முடியாத அளவுக்கு,
இரத்தத்தில் ஊறிய கற்கள்
வழி நெடுக கிடந்தன.

கையில் கிடைத்தது எல்லாம்
ஆயுதமாக மாறியது என்று
சிதறி கிடக்கும் சிதறல்கள் சொல்லியது.
முழுவதுமாய் எரித்தும்,
இன்னும் புகைந்துக் கொண்டு இருந்தது
வன்முறையில் பற்ற வைத்த நெருப்பின்
அடையாளமாய் சில பல வாகனங்கள்.

சில பலரின் கனவுகள்…ஆசைகள்…உழைப்புகள்
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில்
கருகி குப்பையாக கிடந்தது.
குப்பைகள்…நகரத்தின் எஞ்சிய பகுதிகள்
முழுவதையும் சிறைப்பிடித்து வைத்திருந்தது.
கேட்பாரற்று கிடந்தது அங்கொன்றும்
இங்கொன்றுமாக…இயங்காத மனித உடல்கள்.

பாதிக்கப்பட்ட நபர்களின் முகத்தின் சோகங்கள்,
கண்ணீரில் கதை கதையாக சொல்லி,
நடந்ததை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல்
கடந்து செல்லவும் வழியில்லாமல்
பேச்சினை அன்று வாழ்வினை
இழந்து நிற்கிறோம் என்றது.

வன்முறை தீர்வாகாது என்று கூறாமல்
வன்முறையை ஆகாது என்று
முறை கொண்டு வாழ சமுகத்திடம்
கேட்டுக்கொள்வோம்.
என்பதனை தவிர வேற செய்தி
என்ன சொல்லவோ..!

எழுதியவர் : தங்கமாரியப்பன் (3-Mar-20, 6:24 pm)
சேர்த்தது : தங்கமாரியப்பன்
பார்வை : 544

மேலே