யுத்தம்

யுத்தம்...

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடக்குது
சத்தமின்றி சாகடிக்க கரோனாவும் முயலுது
சாதிமதத்தால் பிரிந்திருந்த கூட்டம் இப்போ திணறுது
காசுபணத்தால் உலகையாள நினைத்த மனம் பதறுது
கடவுளரும் கரோனாவை கண்டு ஒதுங்கி நிற்குது
உலகம் உள்ள சூழல் கண்டு உள்மனமும் கதறுது

சாதிமதம் வேண்டாமென்று சொன்னபோது கேட்கலையே
மனிதம் ஒன்றே நிறைவு தரும் என்றபோதும்
கேட்கலையே
காடுகளை அழிக்க வேண்டாம் என்றதையும் கேட்கலையே
கடவுள் பெயரால் பிரிவு வேண்டாம் என்றதையும் கேட்கலையே
கரோனாவால் கற்றுக் கொண்ட பாடங்களை
ஏற்றிடுவாம்...
கடைசிவரை மனிதநேயம் மட்டும் பாரினிலே போற்றிடுவோம்...

ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை எந்நாளும் காத்திடுவோம்...
எதிர் கொண்டே ஒன்றாக கரோனாவை சாய்த்திடுவோம்...
தூய்மையதை நாளும் நாமே தொய்வில்லாமல்
பேணிடுவோம்...
நோய் எதிர்ப்புச் சக்தியினை நன்றாக வளர்த்திடுவோம்...
மனிதம் காத்து மனிதம் வளர்த்து உயிர்களெல்லாம்
காத்திடுவோம்...
கரோனா போன்ற கிருமிகளை ஒற்றுமையால் வென்றெடுப்பாம்...

எழுதியவர் : திருமகள் (21-Mar-20, 5:59 pm)
சேர்த்தது : திருமகள்
Tanglish : yutham
பார்வை : 131

மேலே