கருணை காட்டு

எங்கும் இடர்நிலை இப்புவிவாழ் மக்கள் எதிர்கொளவே
தங்கும் கிருமியைத் தக்கபடி கொல்வாய் தயாபரனே
பொங்கும் மகிழ்ச்சியின் பூமலர வேண்டிப் புவிதனிலே
இங்குன் கருணையை எங்களுக்குக் காட்ட இறைஞ்சுவனே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Mar-20, 11:08 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 124

மேலே