விதண்டாவாதம்

சக்கை போடு போடுது
சந்தைக்கு வந்து
சந்திக்கும் கணமெல்லாம்
சப்பாணம் கொட்டி
தானிருக்க இடம் தேடும்
வலிமையற்ற நுண்கிருமி

தானாக, தன்னை விடுவிக்க
மனமின்றி தள்ளாடும் கிருமி
எய்தவன் இருக்க
அம்பை நோவது போல்
தன்னை தொட்ட இடமெல்லாம்
தங்க நினைக்கின்றதே
இது தெரியாதோ உனக்கு

வேடிக்கை மானிடனே
இதுவும் ஒரு விளையாட்டல்ல
விதண்டாவாதம் புரிகின்றாய்
ஊரடங்கில் அடங்கி இரு
உனக்கே உனக்கு நீயே உத்தரவாதம்

எழுதியவர் : பாத்திமாமலர் (3-Apr-20, 11:19 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 130

மேலே