நிரஞ்சனா

அந்த செண்ட்ரல் இரயில்நிலையம் பரபரப்பாக இருந்து பயணத்தை முடித்து வந்து கொண்டும் , தொடங்க இருப்பவர்களும் வழியனுப்ப வந்தவர்களும், வந்து சேர்தவர்களை அழைத்துச் செல்லவும் மனிதர்கள் கூட்டம்  குழும்பியிருந்தனர் .

தன் பயணத்திற்கான ட்ரைன் வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் தாமதம் எனவே தான்  பாதியில் விட்ட  கதையை  தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள் நிரஞ்சனா (சனா).

பார்பவர்கள் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகுடன் இருந்தாள் சனா. அணிந்திருந்த உடை நேர்தியாகவும் பொருத்தமாகவும் இருந்தது . முகத்தில் அறிவு தெளிவும், படிப்பின் களையும் தெரிந்தது நிரஞ்சனாவுக்கு .

அவள் IPS ட்ரைனிங்காக தலைநகர் டெல்லி சொல்ல தன் பயணத்திற்காக காத்திருந்தாள் .ஸ்டேஷனில் நீல நிற  சட்டை அணிந்த ஒருவன் ரெம்ப நேரமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருந்தான் முதலில் சாதாரணமாகவே நினைத்த நிரஞ்சனா .

சற்று நேரத்தில் மற்ற ஒருவர் வந்து அவனிடம் ஒரு டிராவல் பேக் கொடுத்தான் அந்த மற்றொருவன் தோற்றத்தில் இந்தியனாக  தெரியவில்லை சனாவிற்கு .

அவன் அளித்த பேக் வாங்கி கொண்டு மெதுவாக சந்தேகம் ஏற்பட்டத வாரு சற்றே தள்ளி நின்று கொண்டிருந்த ஒரு அழகான குடும்பத்தினர் பக்கத்தில் சென்று நின்று கொண்டான் நீல சட்டை அணிந்தவன் .

அவன் எல்லா  நடவடிக்கைகளையும்  நிரஞ்சனா கதை படித்து கொண்டே இடையிடையே கவனித்து கொண்டுயிருந்தாள் கொஞ்சம் சந்தேகமுடன் .

சிறிது நேரத்தில் அவன் காணவில்லை பக்கத்தில் இருந்த கடையில் ஏதோ வாங்கி கொண்டுயிருந்தான் . அவன் வைய்த்திருந்த பேக் அந்த குடும்பம் வைத்திருந்த லக்கேஜ் பக்கத்தில் ஒரு அடி தள்ளி இருந்தது சற்று நேரத்தில் அந்த கடையின் அருகிலும் காணவில்லை அவனை.

சனாவுக்கு சந்தேகம் வலுத்தது உடனே அங்கு இருந்த இரயில்வே பாதுகாப்பு பணியில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தாள் . அவர்களும் துரிதமாக அங்கு இருந்தவர்களை அகற்றி விட்டு பாம் ஸ்குவாட் அழைத்து அவன் விட்டு சென்ற பேக்கை சோதனை செய்ய அதில் மிக பயங்கரமான அந்த இரயில்நிலையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அழிக்க கூடிய வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது .

அதை செயலிழக்கச் செய்தனர் அங்கு அனைத்து இடங்களிலும் சொதனை செய்தனர் போலீஸ்.ஒரு மிகப்பெரிய பயங்கர நிகழ்ச்சியில்லிருந்து அனைவரும் காக்கபட்டனர்.

நிரஞ்சனாவுக்கு பாராட்டு மழை கிடைத்தது. தான் IPS ட்ரைய்னிங் முடித்து பதவி ஏற்கும் முன்பே அந்த பதவிக்கு உரிய அனுபவத்தையும் பெருமையும் அடைந்து தன் பயணத்தைத் தொடங்க தயாரானாள் வருங்கால நிரஞ்சனா IPS.

முற்றும்
✍️
Piyu

எழுதியவர் : Piyu (13-Apr-20, 10:47 pm)
சேர்த்தது : Piyu
பார்வை : 169

புதிய படைப்புகள்

மேலே