தன்னம்பிக்கையின் தலைநகரம் -சென்னை
சுனாமி எங்களை
முடக்கிப் போட்டது
வர்தா புயல் எங்களை
முடக்கிப் போட்டது
மழை வெள்ளம் எங்களை
முடக்கிப் போட்டது -
போராட்டங்கள் எங்களை
முடக்கிப் போட்டது -
கொரோனா எங்களை
முடக்கிப் போட்டது - ஆனால்
எத்தனைமுறை முடக்கினாலும்
அத்தனைமுறையும் எழுவோம் ;
நாங்கள் சென்னைவாசிகள்
தமிழகத்தின் முதன்மைவாசிகள்
சென்னை மாநகரம் -
தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல
தன்னம்பிக்கையின் தலைநகரம் -
ஏட்டில் எழுதி வைத்தான்
யாதும் ஊரே யாவரும் கேளிரென்று
ஏட்டில் எழுதியதற்கு சான்றாக
எல்லா ஊர்மக்களும் வாழுமிடமானது
எங்கள் சென்னை -
இங்கே -
பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை -
ஆனால் -
பஞ்சமென்று வந்தவருக்கு -
பிரச்சனையில்லை - எப்படியாயினும்
பிழைத்துக் கொள்வர் -
எது வந்தாலும் -
எங்களின் சரீரத்தை சாய்த்தாலும்
நாங்கள் மனதால் ஒருபோதும்
சரிந்து போகமாட்டோம் - நாங்கள்
சரித்திரமாக உருவெடுப்போம் ;
ஏனெனில் - சென்னைவாசிகள்
ஒரு பாகுபலிக்கு இணையானவர்கள் அல்ல
ஓராயிரம் பாகுபலிக்கு இணையானவர்கள்
அதுமட்டுமல்ல -
சென்னை - நாங்கள்
விட்டுட்டுப் போக -
வாடக வீடல்ல - எங்களின்
சொந்தவீடு -
மீண்டும் எழுவோம்
மீண்டும் உங்களை வரவேற்போம்...
அன்புடன்.....
- சென்னைவாசிகள்
சென்னை
தலை நகரம் மட்டுமல்ல
தன்னம்பிக்கையின் தலைநகரம்
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி