திருத்தொண்டர் வெண்பா மாலை பகுதி 1

சந்தம் மிகுந்த தமிழ்மறைநா லாயிரமும்
தந்த தனிப்பெரியோர் தம்பெருமை - சிந்தையுறச்
சொல்லத் துணிந்துத் தொடுக்கின்றேன் சொல்மாலை
வெல்லும்சீர் வெண்பா விரித்து

நம்மாழ்வார் பெருமை

ஆசிரியம் அந்தாதி அன்பார் திருவிருத்தம்
மாசறியா நற்றிரு வாய்மொழியும் - பாசுரமாய்
ஞானத் தமிழ்ப்பாட்டில் நல்கினான் மாறனெனும்
மோனத் தவம்செய் முனி.

எழுதியவர் : இமயவரம்பன் (18-Jun-20, 7:55 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 209

மேலே