திருத்தொண்டர் வெண்பா மாலை பகுதி 3

குலசேகர ஆழ்வார் பெருமை

படியாய்க் கிடக்கும் பணிவுடையான், வெற்றி
முடியாளும் சேரர் முதல்வன் - வடிவார்ந்த
பொற்கொன்றைச் சூடும் புகழ்க்குல சேகரன்றன்
சொற்கேட்டால் ஓடும் துயர்.

திருமங்கையார் பெருமை

வாடி வருந்தி மனமுருகிச் செஞ்சொல்லால்
பாடிப் பலகவிகள் பண்ணெடுத்தான் - நாடும்
மெலியோர் இடர்க்கெடுக்க வெற்றிவாள் ஏந்தும்
கலியன் கவியே கவி!

திருமழிசையார் பெருமை

மானிடர் தம்மைத் தொழமறுத்து மாநகரைத்
தானகல நேரத் தளராதார் - தேனொழுகும்
சந்த விருத்தமும் வெண்பாவும் தந்தருள
வந்தார் மழிசை மகான்.

எழுதியவர் : இமயவரம்பன் (18-Jun-20, 8:00 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 203

மேலே