கண்ணீர் பூக்கள்

கவிதை

கண்ணீர் பூக்கள்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

மனிதர்களே ....
கண்ணீர் பூக்கள்
கடவுள் கொடுத்த
பன்னீர் பூக்கள் !

துன்பத்தை மனதில்
பூட்டி வைத்தால்
ஆரோக்கியமான உடலே
அசைந்து விடும் !

தூக்கம் வந்தால்
இமைகள் மூடும்
துக்கம் வந்தால்
இமைகள் திறக்கும் !

அழுது கொண்டேயிருந்தால்
வாழ்க்கையே இல்லை
அழாமல் வாழ்ந்தாலும்
வாழ்க்கை இல்லை இதை
உணர்ந்து வாழ்ந்தால்
நிம்மதி நிரந்தரம் !

துக்கம் இருந்தால்
தூக்கம் வருமா ?
துக்கத்தை மனம் திறந்து
பக்கத்தில் உள்ளவரிடம்
பகிர்ந்து கொண்டால்
துக்கம் துவண்டு விடும் !

அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு
துயரம் துன்பம்
அளவுக்கு மீறி உன்
மனதில் கட்டி வைத்தால்
தற்கொலை நஞ்சு
கை கோர்க்க வந்து விடும் !

துன்பம் வரும்போது
கண்ணீர் பூக்கள்
உதிர்ந்தால்தான்
மனிதன்
தன்னிலை பெற்று
உன்னதமாக வாழ்வான் !

பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்
துன்பம் தாளாமல்
கண்ணீர் விட்டால்
கவலை காற்றைப்போல்
கரைந்து போகும் !

ஆழ்வார்கள் நாயன்மார்கள்
அழுது தொழுதுதான்
கடவுளை மனக்கோவிலில்
கண்டு மகிழ்ந்தார்கள் !

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிகரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (25-Jun-20, 12:48 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : kanneer pookal
பார்வை : 92

மேலே