தீப்பொறி

தென்றலாய் வீசவோ
பூகம்பமாய் பிளக்கவோ
உணர்ச்சியாய் பிரதிபலிக்கவோ
சாந்தமாய் பணியவோ
கற்பனையில் கவி பாடவோ
தூரிகையில் தீற்றலாகவோ
உனக்குள் ஓர் மாற்றம்
சம்பவங்களின் உருமாற்றம்
அந்தகார வாழ்வு பிரகாசிப்பதும்
ஒளிரும் மனம் இருள் சூழ்வதும்
நிகழும் நாளும்
நற்கிரியையாய் சில
தீப்பொறிகள்
சம்பவங்களாகவோ
செய்கைகளாகவோ
நம்மை தீண்டும்போது
பற்றிக்கொண்டால் கமழும்
நம் வாழ்வு .

எழுதியவர் : (25-Jun-20, 10:54 pm)
சேர்த்தது : vincy
பார்வை : 50

மேலே