தீரும் அந்தியில்
__________________
இப்படி உரையாட
பிடிக்கவில்லை என
நின்று விடுகிறாய்.
பின் பரவசத்தில்
தத்தளிக்கிறாய். உயிரில்
மெழுகின் சூடு பரவ...
முன் வந்து கேட்கிறாய்
தாபம் என்றால்?
உன் வினாவோடு எங்கோ
என் முத்தம் செல்கிறது.
ஓர் அமைதி நீளும்.
உன் கண்களில் விரகம்
யுத்த கால குளிராக
வந்து சேர்கிறது.
புனைவின் உச்சமாய்
என் கைகள் தீண்ட
ஓடைக்குள் தவறிய
மான்குட்டியாய் உன் மனம்.
ரகசிய உரையாடலில்
காமத்தின் தழும்புகள்
சிவந்து புடைக்கின்றன.
உன்னோடு இருக்க
கிடைக்கும் ஒரு கவிதை
என்கிறேன் அப்போதும்.
பின்னொரு கணம் நீ
அழியாத கோபத்துடன்
புறக்கணித்து செல்ல...
துடித்து இறுகும்
உன் இரு மார்புகளும்
அனல் மழையில்
அமிழ்ந்து குளிர்கிறது.
உன்னை என்னிடம்
தொலைந்து போக
உன்னிடமே நீ
சொல்லிவிட்டு...
🌹🌹🌹🌹🌹
____________________