மணநாள்

மணநாள் இது மணநாள்
மாலை தோள் கண்ட திருநாள்
மகிழ்வாய் மன மகிழ்வாய்
இவன் தலைவன் ஆன பெருநாள்

தானாகி நின்ற ஆணே
சரி பாதி ஆன நாளே
விடைமீதி நீயும் சொல்ல
மனையாளும் வந்த நாளே

கண்கள் பார்த்த தாரகை
கைகள் கோர்த்து நடந்த நாளே
வாழ்க்கை முழுதும் வசந்தம் வீச
வாசல் தாண்டி வந்த நாளே

உயிரின் ஓசை உறவின் ஆசை
உணர்வில் யாவும் நின்ற நாளே
உந்தன் சொந்தம் எந்தன் சொந்தம்
நமது பந்தம் என ஆன நாளே

ஊரில் உள்ள யாவரும்
உளமாற வாழ்த்திய நாளே
காலங்கள் கடந்தே சென்றாலும்
கல்வெட்டாய் பதிந்த நாளே

இறைவனே திணறிடும் பந்தம்
இல்வாழ்க்கை சம்பந்தம்
நமக்கென்ன ஆதங்கம்
இனிமையாய் வாழ்ந்திடவே
வாழ்வாங்கு வாழ்த்துகிறேன்..

எழுதியவர் : விஜி (15-Jul-20, 5:17 am)
சேர்த்தது : krishna viji
Tanglish : mananaal
பார்வை : 71

மேலே