வாழ்க்கை வெறுங்கனவு

விழிதனில்
ஈரப்பதம் கோடையிலும் குடிக்கொள்ள
மொழிதனில்
மௌனம் சபையிலும் அரங்கேற
நினைவுதனில்
நிம்மதியை  நெருடியது நெருஞ்சிமுள்
இலக்குதனில்
இடையூறை இயம்பியது இன்னல்கள்
உறவினில்
உள்ளன்பின்றி உறவுகள் உறவாட
கனவினில்
கலர் கனவுகள் கரைந்தோட
மனதினில்
மகிழ்வின்றி எண்ணங்கள் ஏக்கமிட
இறையினில்
இரண்டறக் கலந்தேன் இன்புற்றிருக்க
விதிதனில்
வியாபிக்கவில்லை என் நுண்ணறிவு
மதிதனில்
மலியவில்லை என் ஊழ்வினை
உயிரினில்
உறையவில்லை உத்தமன் உள்ளுணர்வு
உணர்வினில்
உணர்ந்தேன்  வாழ்க்கை வெறுங்கனவு

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (8-Aug-20, 10:16 pm)
பார்வை : 146

மேலே