KAANIKKAI

காணிக்கை !

கண்களால் பார்த்து
கைகளால் எடுத்து
மனதால் பிரித்து
உதடுகளால் படித்து
உள்ளத்தில் பதித்து
நாள்தோறும் வாழ்க்கை படகோடு
காதல் துடுப்பை தொடுக்கும் நெஞ்சங்களுக்கும் !

காகிதத்தில் மை பூசி
கவிதையில் பொய் பூசி
கற்பனையில் சுவை பூசி
காலத்தோடு காதல் செய்ய துடிக்கும்
ஒவ்வொரு கலைஞனுக்கும் !

பேதை , பெதும்பை ,மங்கை , மடந்தை ,
அறிவை ,தெரிவை , பேரிளம்பெண் போன்ற
சொற்களுக்கு பூப்பூவாய் உயிர் வாழும்
உள்ளத்து நெஞ்சங்களுக்கும் !

இக்கவிஞ்சனின் இக்கவி மலர் சார்பாக
அனைவருக்கும் என் கவிதையை காணிக்கையாக்குகிறேன் !


அன்புடன்
ராமன் மகேந்திரன்

எழுதியவர் : ராமன் MAHENDIRAN (11-Aug-20, 12:14 pm)
பார்வை : 45

மேலே