நாகாக்க தவறிய அவள்

ஏனோ எனையறியாது அவன்
மனம் நோக வாய்விட்டு வந்துவிட்டேன்
பெண்புத்தி பின்புத்தி என்பர் இங்கு
வந்தனான் கொஞ்சம் யோசிக்க புரிந்தது
நான் செய்த தவறு ..... மீண்டும் ஓடினேன்
காலம் என்னை முந்திக்கொண்டது
அவன் மனதில் நான் இல்லைபோலும்
எனைப் பார்க்கவும் மறுத்துவிட்டான் அவன்
எனக்காக காத்திருந்த நாட்கள் தந்த
வேதனையில் வாடிய மனம் அது
இப்போது அவனை மறக்க தெரியா
பேதை மனம் தாங்கி வாழும் நான்.......
வள்ளுவனின் வாக்கு என் கண்முன்
' நாவைக் காக்க மறந்த நான்'
என்மேல் நானே தூவிக்கொண்டேன் மண்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Aug-20, 1:46 pm)
பார்வை : 974

மேலே