இந்தியன்

மேற்கிலுள்ள பேருக்கெல்லாம்
காலமெல்லாம் காலமுக்கி நாள்முழுதும் சேவைசெய்யும்
நன்றியுள்ள வேலைக்காரன்!

தாய்மொழியைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டுத் தூக்கிலிட்டுப்
பிறமொழிக்கே வாலையாட்டும் மானமுள்ள கவரிமான்!

இனவுணர்வைப் பிணவறையில்
பத்திரமாய் பூட்டிவைத்து
தூக்கமின்றி பாதுகாக்கும் வீரமான காவலாளி!

ஆறுகளைக் கூறுபோட்டு
சோலைதனைப் பாலையாக்கி பணத்துக்கெல்லாம் பாதைபோடும்
பேதமில்லா சாதனையாளன்!

பன்முகத்தன்மை எல்லாம்
படுகுழியில் தள்ளிவிட்டு சாத்தானுடன் வேதமோதும்
சூதறியா சாதுப்பூச்சி!

அதிகாரத்தில் சதிகள்செய்து தடையுமின்றி தடமுமின்றி வரலாற்றை இடமாற்றும் வஞ்சமில்லா நெஞ்சக்காரன்!

பாசமான வேசம்போட்டு
தேசப்பற்றை நாசமாக்கி பிணைப்பதுவாய் பிரித்துவைக்கும்
நேசமுள்ள தேசபக்தன்!

ஏழையான பாவிக்கெல்லாம்
கல்விகற்கும் பாதையிலே
கருவமுள்ளை நிரப்பிவைத்துக் களிப்படையும் காமராசன்!

இருப்பதனை இல்லாததாக்கி இல்லாததை இருப்பதாக்கும் மாயவித்தை மோகங்கொண்ட விந்தையான சிந்தையாளன்!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (15-Aug-20, 12:54 pm)
பார்வை : 33

மேலே