இட்லி
-----------------------
ஒரு பங்கு அரிசிக்கு
கால் பங்கு உளுந்திட்டு
மூவிரலில் வெந்தயம் சிறிதிட்டு
மூழ்கும் நீரில் இம்மூன்றை தனியே
மூன்று மணிநேரம் ஊறவைத்து
ஆட்டுக்கல்லில் அரிசி தனியேயும்
ஊறும் உளுந்து வெந்தயம் சேர்த்தரைத்து
தாணியமிரண்டும் மசிந்த பின்
உள்ளங்கையில் அளவாக உப்பெடுத்து
கை மணிக்கட்டு மறையுமளவு
கை விட்டு கலந்த மாவை
நொதி பொங்க ஓரிரவு ஊறவைத்து
வரும் காலை கரண்டியால் நன்கலந்து
இட்லி குண்டானில் நீர் சேர்த்து
தணிந்து எரியும் அடுப்பிலிட்டு
தட்டு குழியில் குவியாமல் மாவூத்தி
ஆவி மூடியை முட்டி மோதியதும்
தட்டை இருகையால் தூக்கி
தலை குப்புற தாம்பாளத்தட்டில் கவிழ்த்து
ஆவி பறக்கும் இட்லியுடன் அறுசுவையுடன்
தேங்காய் மற்றும் வெங்காய தக்காளி சட்னியுடன்
பாசி பருப்பு சாம்பாருடன் பரிமாறும்
குடும்ப தலைவிக்கும் அதை ருசித்து
சாப்பிட்டு முடிக்க மனமில்லாமல் தினம்
கை கழுவும் இட்லி பிரியர்கள் அனைவருக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்..
----------------------------
சாம்.சரவணன்