மீண்டும் பிறந்து வா பாரதியே

முண்டாசு கவி பாரதியே
திரும்பி வா !

அச்சமில்லை அச்சமில்லை
என்றாயே!

இன்று அச்சத்தோடு வாழும்
மானிடனை பார்க்க வா !

புதுமைப்பெண்கள் வாழும்
பூமியை பார்க்க வா !

ஆண்மை எதுவென்று கூற
அழியாத தமிழில்;
மீண்டும்
உனை
அர்ப்பணிக்க வா !

இயற்க்கை சக்தியை
அழிக்க துடிக்கும்,
சொற்ப மனிதனை;
உன் கோல் கொண்டடித்து
புத்தி
புகட்ட வா !

பசுமை மாறாதிருக்க;
பஞ்சம் தலைவிரித்து
ஆடாமல் இருக்க;

*மீசை துடிக்கும் பாரதியே*

மீண்டும் இம் மண்ணில்
ஓர் பிறப்பெடுத்து வா !

எழுதியவர் : சிம்மயாழினி (11-Sep-20, 1:07 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 104

மேலே