நகைச்ச்சுவைத் துணுக்குகள் 22

இந்தப் புத்தகத்தோட தலைப்பே நல்லா இல்லையே.

ஏன்?

"பொறுக்கி எடுத்த பத்துக் கதைகள்"னு போட்டிருக்கு. இருந்திருந்தும் ஒரு பொறுக்கி எடுத்த பத்துக் கதைகளையா போடணும்? அதுக்குப் பதிலா ஒரு நல்லவன் எடுத்த நாலு கதைகளைப் போட்டிருக்கக் கூடாதா?.
********************
அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.

எதனாலே அப்படிச் சொல்றே?

ஒரு ஜலதோஷம்னு அவர்கிட்டே போனா Chest X-ray, ECG, தலையிலிருந்து கால் வரையிலும் Scan எடுக்கணும், மத்த எல்லா டெஸ்டும் பண்ணணும் அப்படீன்னு எல்லாம் சொல்லாம, ஒரு மருந்தை, அதையும் புரியற மாதிரி எழுதிக் கொடுத்து "ரெண்டு நாள் இந்த மருந்தை சாப்பிடுங்க. அப்புறம் வந்து என்னைப் பாருங்க" ன்னு சொல்றார்னா பாத்துக்கோயேன்.
****************
என்னைக்குமே கோர்ட்டுக்குப் போகாத அந்த வக்கீல் இன்னிக்கிக் கோர்ட்டுக்குப் போயிருக்கார், தெரியுமா?

நல்ல கேஸ் ஏதாவது கிடைச்சிருக்கும்

அதான் இல்லே. அவர்பேரிலே யாரோ கேஸ் போட்டுட்டாங்களாம்
****************

அடாவடி: (வெகுநாள் கழித்து வந்து நீண்ட நேரம் பேசிவிட்டு) சரி, நான் போயிட்டு வரேன்.

நண்பன்: ரொம்ப சந்தோஷம்.

அடாவடி: நான் போயிட்டு வரேன்னு சொல்றது உனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கா?
**************

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (16-Sep-20, 4:32 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே