காஷ்மீர் பூக்கள்

உலக அமைதி திணம்

உன்
சிந்தனையை
பிறரிடம் அண்பால்
பதிவு செய் ....
உன் கையில்
உள்ள துப்பாக்கி
தோட்டாக்களும்
பூக்களாய்
வெளியே வரும்....

உன்
சிந்தனையை
மதம் பிடித்த
யானையைப்போல
பிறரிடம் புகுத்த
நீ -நினைத்தால்......

பிறரிடம் உள்ள
பூக்களும துப்பாக்கி
தோட்டாவாய்
உன் மீது வந்து விழும்...

எல்லை
தாண்டியது
கோழிதான்
என்பதை
நீ-மறந்து...

உன்
மூர்க்கதனத்தை
அதன் மீது
காட்டியதால்...

நீ
சேர்த்துவைத்த
கோனிப்பை
பணமும்
சிறு கோழியால்
சிதைந்து போனதை
நினைத்தாயா நண்பா...

உன்
நினைவுகள்
என்றும்
பூக்களின் மீது
விழுந்த பனித்துளியாய்
இருக்கவேண்டும்....

வெங்காயத்தின்
மீது
விழுந்த
கத்திபோல்
நீ இருந்தால்
உன் வாழ்க்கையில்
கண்ணீர்தான் மிஞ்சும்....

உன்
கண்ணீரை
பண்ணீர்போல
சமூகம் நேசிக்க
உன்னையே
நீ மாற்றிக்கொள்...

நீ
கால் வைத்த
முட்புதர்கூட
காஷ்மீர் பூக்களாய்
மணம் வீசும்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (21-Sep-20, 5:06 pm)
பார்வை : 110

மேலே